வெள்ளி, 20 நவம்பர், 2015

தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம்



02.00 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது.
02.02 PM -  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மன்றுக்கு வருகை
02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டத்தை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்பிக்கின்றார்.
02.05 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
02.07 PM - 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.
02.10 PM - ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
02.17 PM - பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
02.20 PM - எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.
02.24 PM - கடந்த பத்து மாதங்களில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
02.27 PM - 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
02.30 PM - கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.
02.33 PM -  ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது.
02.37 PM - கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.
02.40 PM - 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.
02.45 PM - எதிர்கால வரவு செலவுத்  திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.
02.48 PM - கடந்த பத்து மாதங்களில் நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினையை கண்டுப்பிடித்துள்ளோம்.
02.53 PM - மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.
03.00 PM - புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.
03.05 PM - பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
03.10 PM - டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
03.15 PM - வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
03.15 PM - சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.
03.20 PM - கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.
03.22 PM - எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
03.25 PM - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.30 PM - வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.
03.33 PM -  தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.38 PM - இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.
03.41 PM - அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன  உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.
03.43 PM - பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.
03.45 PM - பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
03.46 PM - கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
03.47 PM - மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.
03.48 PM - 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து  295 ரூபாவாக குறைப்பு.
03.49 PM - புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.50 PM - தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.
03.52 PM - தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.54 PM - தேயிலை ஏற்றுமதியின் போது 'சிலோன் டீ" என கட்டாயம் பெயரிட வேண்டும்.
03.56 PM - பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.
03.58 PM - “ பொக்குரு கம்மான ” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.59 PM - வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.
04.00 PM - அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.
04.01 PM - சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04.02 PM - தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.
04.03 PM - காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.
04.04 PM - பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.
04.05 PM -  அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.
04.06 PM - கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய  1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04.07 PM - 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.
04.09 PM - இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.
04.13 PM - 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.
04.16 PM - புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.
04.18 PM - எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.
04.20 PM - இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
04.22 PM - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
04.25 PM - சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
04.26 PM - குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.
04.27 PM - அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.
04.27 PM - ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.
04.30 PM -  ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04.31 PM - வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.
04.31 PM - தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.
04.33 PM - டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்.
04.35 PM - வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.
04.37 PM - கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.
04.40 PM - சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.
04.43 PM - கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.
04.46 PM - திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.
04.48 PM - உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
04.52 PM - புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.
04.56 PM - பாடசாலை மாணவர்களுக்கு  250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
05.01 PM - ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.
05.05 PM - தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.
05.08 PM - தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.
05.10 PM - தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.
05.11 PM - ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.
05.12 PM - மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.11 PM - விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.11 PM - அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட  வசதி
05.12 PM -  ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.
05.12 PM - உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.
05.15 PM - தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.
05.16 PM - கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.17 PM - ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.
05.18 PM - மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.
05.20 PM - புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.
05.20 PM - 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.
05.21 PM - சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.21 PM - மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.
05.23 PM - பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.
05.25 PM -  சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.
05.27 PM - குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.
05.30 PM - பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.32 PM - ல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.
05.34 PM - கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.
05.35 PM - நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.35 PM - பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.
05.37 PM - பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.
05.39 PM - திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.
05.41 PM - மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.
05.43 PM - நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.
05.46 PM - ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.
05.49 PM - தனியார் பஸ்கள் , முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.
05.52 PM - ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.
05.55 PM - வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.
05.59 PM -11 அத்தியாவசிய பொருட்களின் விலை   100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.
06.05 PM - பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.
06.07 PM - 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.
06.08 PM -  சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .
06.09 PM -  நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.
06.10 PM - பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.
06.11 PM - கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.
06.11 PM - கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.
06.12 PM - கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.
06.12 PM - வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.
06.25 PM - 2016 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டோஸ் சீட் பாவனையை முற்றாக நீக்க திட்டம்.
06.27 PM - ஆங்கில தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.