திங்கள், 20 டிசம்பர், 2010

வீணானது கனவு! (சிறுகதை)

என் பெயர் நிஷா, வயது 21. பார்க்கிறதுக்கு அளவான உயரம், பொதுவான நிறம், நீளமான தலைமுடி, எடுப்பான முன்னழகு. பள்ளிக்கூடத்தில படிக்கும் போது, பெடியன்கள் சொல்லுவான்கள் ‘கனாக் காணும் காலங்கள்’ நாடகத்தில வர்ர சங்கவி மாதிரியாம். கோபமா அவங்களை முறைச்சு பார்த்திட்டு, மனசுக்குள்ள சிரிச்சுக் கொள்வன். வீட்டுக்கு ஒரே பொம்பிளைப் பிள்ளை. அதால அம்மா, அப்பா முதல் ரெண்டு அண்ணன்கள் வரை எல்லாரும் செல்லமா என்னை வளர்த்தாங்க. நானும் அவங்களுக்கு எந்த கரைச்சலையும் கொடுக்கல. அன்பு நிறைந்த என் வீட்டிலேயே நெடுகலும் அடைச்சு இருக்கிறதால ப்ரண்ட்ஸ்ஸையும் பெரிதா சேர்த்துக் கொள்ளல. “அதை வாங்கித் தாங்க, இதை வாங்கி தாங்க” எண்டு எப்பவும் நான் அரியண்டம் குடுக்கிறதில்லை. அதேபோல நான் கேட்காமலே அவை எல்லாம் வீட்டை வந்து சேரும்.

சின்ன வயசில மூன்று சில்லு சைக்கிளுக்கு ஆசைப்பட்டன்;;, வாங்கித் தந்தாங்க. ஒன்பதாம் ஆண்டில கைச்செயினுக்கு ஆசைப்பட்டன், செஞ்சு தந்தாங்க. ‘ஏ.எல் மட்ஸ்’ படிக்க தொடங்கின போது ‘ப்ளைக் போர்ட்’ இருந்தா நல்லதெண்டன். அடுத்த நிமிசம் அது வீட்ட இருந்திச்சு. ஆனா நான் கேக்காமலே, ‘ஏ.எல் எக்ஸாம்’ எடுக்க முதல் கல்யாணம் பேசிட்டாங்க. அந்த நேரம் அம்மாட்ட பக்கத்து வீட்டு ‘அன்ரி’ சொன்னது இன்னும் காதில கேட்டுக் கொண்டே இருக்கு.

“ஒருத்தி தானே! அவளுக்கு கல்யாணத்தை காலா காலத்தில செஞ்சிட்டீங்க எண்டா நிம்மதியா இருக்கலாம்”.

‘அப்ப நான் வீட்டுக்காரருக்கு அவ்வளவு பாரமாவா இவ்வளவு காலமும் இருந்தன்?. அதென்ன பொம்பிளை பிள்ளைங்க எண்டா வேளைக்கு கட்டிக் கொடுக்கிறது. அதுவும் வீட்டில ஒரே பிள்ளை எண்டா இன்னும் வேளைக்கு’ எனக்கு நினைக்கும் போதே அழுகையா வந்தது. அடக்கிக் கொண்டேன். ‘நான் ஏ.எல் எக்ஸாம் எடுக்கோணும். பாஸ் பண்ணி கம்பஸ் போகணும். அதுக்கு பிறகு தான் கல்யாணம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இதை எப்படி அப்பாவிடம் சொல்வது? நான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தந்த அப்பா, ஏன் ஆசைப்படாத ஒன்றை வலிந்து திணிக்கின்றார். மனதில் கலவரம் படிப்பு ஓடவில்லை.

“மாப்பிள்ளை லண்டனில சொப்ட் வெயார் இஞ்சினியராம். மாசம் இஞ்சத்தைய காசுக்கு ரெண்டு மூன்று லச்சம் உழைக்கிறானாம். சீதனம், கீதனம் எதுவும் வேண்டாம் எண்டு மாப்பிள்ளையிண்ட அப்பா சொல்லிட்டார். இதுக்கு பிறகு என்ன யோசிக்கணும். பையன் வேற நல்லவன். சிகரட், குடி எண்டு எதுவும் இல்லை. இப்பிடி ஒரு சம்பந்தத்தை நீங்கள் வாழ்கையிலும் பிடிக்கேலாது”

புரோக்கரின் புழுகு என் காதில் விழுந்தது.

“அதுக்காக நாங்கள் சும்மா விட்டிடுவமா? பிள்ளை எங்களுக்கு ஒருத்தி. எங்கட எல்லாம் அவளுக்கு தானே! இந்த வீடும், 50 லட்சம் காசும், நகையும் வேண்டிய அளவு போடுறம் எண்டு சம்மந்திட்ட சொல்லுங்கோ” இது அப்பா.

வானமே இடிஞ்சு தலையில் விழுந்தது போலிருந்தது எனக்கு. எல்லாம் போச்சா! எனக்கு காதல், கத்தரிக்காய் எண்டு எதுவும் இல்ல. ஆனா இப்ப கல்யாணம் வேண்டாம். இதை எப்பிடி அப்பாட்ட சொல்லுறது.

“பிள்ளைக்கு மாப்பிளையை பிடிச்சுதாமோ” புரோக்கர் கேட்டார். ‘பிடிச்சா மட்டும் என்ன செய்திடவா போறன்’ என்னை நானே கேட்டுக் கொண்டன். “பெடியனை எங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவளுக்கும் பிடிக்கும். இவ்வளவு நாளா அவளுக்கு என்ன தேவை எண்டுறதை பார்த்து பார்த்து செய்யுற எனக்கு இந்த விசயத்தில பிழை விடத் தோணுமோ” அப்பா கம்பீரமா சொன்னார்.

‘இவர் மனசை நோகடிக்கலாமோ’ என்னால் ஒண்டுமே செய்ய முடியல. வீட்டிலேயே அடைச்சு கிடந்து, வீட்டார் மேல பாசத்தை கொட்டினதால எதுவும் எதிர்த்துப் பேச தைரியம் வரல. அம்மா மாப்பிளையிண்ட படத்தை கொண்டு வந்து தந்தா. லண்டன் குளிருக்குள்ள ஸ்வட்டரையும் போட்டுக் கொண்டு ‘லண்டன் ப்றிட்ஜ்’ முன்னாடி எடுத்த படம். எல்லாரும் லண்டன் போனா இதைத் தானே செய்வினம். கல்யாணம் பிடிக்காத எனக்கு மாப்பிள்ளையையும் பிடிக்கல.

பத்தொன்பது வயசில ‘கொலைக்களத்துக்கு போற ஆடு’ மாதிரி கல்யாணத்திற்கு தயாரானேன். சம்பந்தம் முற்றாக்கின பிறகு மாப்பிள்ளை என்னோட இடைக்கிடை ‘கோல்’ பண்ணி கதைப்பர். தன்னைப்பற்றி சொல்லுவர். அதைவிட அதிகமா என்னைப்பற்றி கேட்பார். நாளாக நாளாக எனக்கே அந்த வாழ்க்கை பழகி விட்டது. என்னை நானே மாற்றிக் கொண்டேன். இல்லறம் என்ற பந்தத்தில் என்னை இணைத்துக் கொள்ள தயாராகிவிட்டேன். படிப்பில் இருந்த ஆசை, கற்பனை எல்லாவற்றையும் இனிவரப்போகும் வாழ்க்கையில் செலுத்தினேன். கல்யாண நாளும் நெருக்கியது. அவர் லண்டனிலை இருந்து வந்திட்டார். பொன்னுருக்குக்கு அண்டைக்கு தான் அவரை நேரில பார்த்தன். ஆசாரி வந்து போன பிறகு அவர் என்னட்ட கதைக்கோணும் எண்டு அண்ணனுட்ட சொன்னவர் போல, அவன் வந்து சொன்னான்.

எனக்கு தவிப்பு, நெஞ்சு படக் படக்கென அடித்தது. அவருக்கும் அப்படித் தான் என அப்போது நினைத்தேன். அரை மணித்தியாலமாக அவர் முகத்தைப் பார்க்காமலே கதைத்தேன். என்ன கதைத்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. கிட்ட நெருங்கியவர் கையைப் பிடித்துக் கொண்டார். விருட்டென விலகினேன். முதல் ஆடவன் ஸ்பரிஸம். உடலெங்கும் பல மின்னல் பாய்ந்தது. பிறகு அவர் முயற்சிக்கவில்லை. அன்று போய்விட்டார். பிறகு மணமேடையில் தான் கண்டேன். கனவுகளுடன் கழுத்தை நீட்டினேன். கல்யாணம் நினைத்ததை விட சிறப்பாகவே நடந்தது. அப்பாவும், மாமாவும் போட்டி போட்டுக்கொண்டு பத்துக் கூட்டம் மேளத்தைப் பிடித்து திருமணத்தையே கலக்கிவிட்டார்கள். நேரம் ஏற ஏற மனதுள் ஒரே படபடப்பு. நான் முழுமை பெறப்போகின்றேனா? அல்லது என்னை முழுமைப்படுத்தப் போகின்றானா? சாதாரண பெண்களுக்கிருக்கும் ஆசைகளும் ஏக்கங்களும் தானே என்னுள்ளும் இருக்கும். அதற்கான நேரமும் வந்தது.

என்னருகில் வந்து உட்கார்ந்தவர், சற்று நெருங்காமலே இருந்தார். பேச்சைத் தானாகவே தொடக்கினார். ‘உம்’ என்ற ஒற்றை வார்த்தையை தவிர எதுவும் என் வாயிலிருந்து வெளிவரவில்லை. அந்த நிமிடத்திற்காய் தவித்திருந்தேன். நானும் பெண்ணல்லவா!

“நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கிறியா நிஷா?”
சுருக்கென்றது எனக்கு, “இல்லையே!” என்றேன் தடுமாற்றத்துடன். இந்த தடுமாற்றம் திடீரென எழுப்பப்பட்ட கேள்வியால் வந்தது.

“பிறகேன் பதட்டப்படுறாய். டேக் இட் ஈசி”
“………….”
“நீ லவ் பண்ணினாலும் பிரச்சினையில்லை. லவ் பண்ணாட்டியும் பிரச்சினை இல்லை. லண்டனிலை இருந்த நான் என்ன உலகம் தெரியாதவனா? இனி என்ன வாழ்க்கை வாழப்போறம் எண்டுறது தான் முக்கியம்”
அவன் வார்த்தைகளினூடு வெளிவந்த திண்மம், அவன் மீது எனக்கு தனி மரியாதையையே உண்டு பண்ணியது.

“நேரமாகுது. நித்திரை வரலையா?” என கூறியவாறே அவன் என்னை முத்தமிட நெருங்கினான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ‘சிகரட்’ வாடை அவனிடமிருந்து வெடுக்காக மணத்தது. அதை நெடியில் புரிந்து கொண்ட நான்,

“ஏங்க! ஏதாவது மணக்குதா?” என்றேன் பட்டும் படாமலும்.
“ஏதாவதா? அப்பிடி ஒன்றும் தெரியலையே எனக்கு” என்று மீண்டும் நெருங்கினான்.
“உங்களிட்டை இருந்து தாங்க” சிகரட் வாடை என்பதை சொல்ல முடியாது மென்று விழுங்கினேன்.
“ஓ! அதுவா, கல்யாணத்திலை மேக்-அப் எண்டு அதை இதைப் போட்டுட்டாங்கள்” பதிலை பாக்கட்டிலேயே வைத்திருப்பான் போலிருக்கின்றது. என் சிறு சந்தேகத்துடனேயே முதலிரவு முடிந்தது.
மறுநாள் இரவு, அவனிடமிருந்து வந்த வாடை வித்தியாசமாக இருந்தது. ஆளும் கொஞ்சம் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டான். எல்லாமே புரிந்து விட்டது. புரோக்கரின் வசனங்கள் காதில் ஒலித்தன, “பையன் வேற நல்லவன். சிகரட், குடி எண்டு எதுவும் இல்லை”. பெரும் பாறாங்கல்லை என் தலையில் தூக்கி போட்டது போல் இருந்தது. எங்கிருந்து தான் எனக்கு தைரியம் வந்ததோ தெரியவில்லை.

“குடிச்சனீங்களா தினேஷ்”
“குடிச்சதா… யாரு… நானா?...”
“ஆமா! நீங்க தான்”
“உனக்கென்ன விசரா! நான் ஏன் குடிக்கணும்”
“எங்கிட்ட மறைக்காதீங்க. நீங்க குடிச்சிருக்கிறீங்க எண்டுறதை உங்க கண்ணும் செயலும் காட்டிக் கொடுக்குது”
“ஓமடி குடிச்சன்.. உனக்கென்ன வந்தது. குடியா முழுகிப் போச்சு. கல்யாணப் பார்ட்டி வையெண்டு ப்ரண்ட்ஸ் கேட்டாங்க. வைச்சன், குடிச்சன். இது தப்பா?”
“உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையெண்டு அப்பா நினைச்சிட்டு இருக்கார். நீங்க குடிக்கிறது தெரிஞ்சா…” என்னால் தொடர்ந்து கதைக்க முடியவில்லை. வீறிட்டு வந்த அழுகையை அடக்க முடியாது வாய்விட்டழுதேன்.

“அங்கத்தைய குளிருக்கு லைட்டா அடிச்சா தான் வேலை செய்ய முடியும். அதை விட்டுட்டு சும்மா குடிகாரன், அது, இதெண்டு இப்பவும் பழசுகள் மாதிரி அலட்டுறீங்க”
“உங்க தப்பை நியாயப்படுத்தாதைங்க தினேஷ்”
“என்னடி செய்வாய்” ஓங்கி ஒரு அறை கன்னத்தில் வீழ்ந்தது. மிருகம் போல் தன் பசியைத் தீர்த்துக் கொண்டு உறங்கி விட்டான். அன்று தொடங்கிய நரகம் அவன் மீண்டும் லண்டன் செல்லும் வரை தொடர்ந்தது. எதையும் நான் என் வீட்டாரிடம் சொல்லவில்லை. தலைவிதியை நொந்து கொண்டேன். என் கல்யாணத்தை சிறப்பாக செய்த சந்தோசத்தில் அப்பா இருக்கின்றார். அவர் மனதை புண்படுத்த முடியவில்லை. கட்டிய கடனுக்காக அன்று அவனை ‘எயார்போர்ட்’ வரை கொண்டு சென்று விட்டு வந்தேன். ஒரு ‘பாய்’ கூட சொல்லாமல் போய் விட்டான். அவனைப் பொறுத்தவரை, என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த என்னை கூண்டில் பறவையாக்கிய அப்பாவை என்னவென்று சொல்வது.

“மாப்பிளை ஒரு மாதத்தில பெட்டையை அங்க எடுத்திடுவன்” என்று அப்பா வருபவர்கள், போவபர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நரக வாழ்க்கையைத் தான் அங்கு போயும் வாழ வேண்டுமா? ‘பேசாம உங்களோடையே இருந்திடுறன் அப்பா’ என சொல்லணும் போல இருக்கு. மாசம் ஒன்றல்ல, நான்கைந்து ஆகியும் என்னை அவன் எடுப்பதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் நாளும் கதைத்து வந்த அவன், கிழமைக்கு ஒருக்கா, மாசத்துக்கு ஒருக்கா, இப்ப எப்பவாவது இருந்திட்டு தான் கதைக்கிறது. ‘எம்பஸில எல்லாம் குடுத்திருக்கு, விசா தரப்பிந்திது’ என்று அவன் சொன்னதாக அப்பா சொன்னார். ‘கடவுளே, எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை. இது தான் என் வாழ்க்கையா? என்னால் அவனை மாற்ற முடியாதா? முடியும்! என திடசங்கர்ப்பம் பூண்டேன். அதற்கு நான் லண்டன் போக வேண்டும்.

‘எம்பஸி’ பதில் எப்ப வருமெண்டு காத்திருந்தன். பிடிக்காத விரதமில்லை. போகாத கோயிலில்லை. எதையும் வெளியில் சொல்லாது மறைத்து வைக்கும் சுபாவம் என்னுடையது. இதனால் எனக்குள் ஏற்படும் இன்ப, துன்ப மாற்றங்களை எவரும் இலகுவில் அறிந்துவிட முடியாது. காத்திருந்து, விரதமிருந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பார்ப்பவர்களெல்லாம், ‘ஏன் மெலிந்து விட்டாய்?’ எனக் கேட்காமல் விடமாட்டார்கள். மன நிம்மதி உள்ளவனுக்கு தான் உணவு தேவைப்படும், நன்றாக உணவு உண்பவனுக்குத் தான் உறக்கம் வரும். இப்படி எதையும் ஒழுங்காக செய்யாத நான் மெலிந்தது நியாயம் தானே!

அப்படித் தான் அன்றொரு நாள் நான் வழக்கமாக கோயில் கும்பிட்டு விட்டு சிறிது நேரம் ஆலய சூழலில் அமைந்துள்ள பலா மரத்தின் கீழுள்ள கல்லில் உட்கார்ந்திருந்தேன். என்னை நோக்கி ஓர் உருவம் வந்தது. தூரத்தே அடையாளம் தெரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஆளை அடையாளம் கண்டு கொண்டேன். பத்மநாதன் வாத்தியாரிட்ட கெமிஸ்ரி படிக்க வந்தவன். சர்வேஸ்! இப்ப ஆளே மாறிட்டான். ‘சங்கவி’ என்று என்னை கூப்பிடுற ஆளில
முக்கியமானவனே இவன் தான்.

“என்ன நிஷா! எப்பிடி இருக்காய்?”
“இருக்கிறன். பறவாயில்லை”
“பதிலில ஒரு சந்தோசத்தையும் காணல, ஏதாவது பிரச்சினையா?”
“அப்படியில்லையே!”
“கல்யாணம் செய்திட்டாய் எண்டு கேள்விப்பட்டன். நேற்றுத்தான் உவன் சுரேஷ் சொன்னவன்”
“ம்….”
“அவர் என்ன பண்றார்?”
“வெளிநாடு”
“எங்கை?”
“லண்டன்”
“லண்டனா? நானும் அங்கை தானே ரெண்டு வருஷமா இருக்கன். பிரச்சினையோட கொழும்பு போய், அப்பிடியே ஸ்ருடன்ட் விஸாவுக்கு அப்ளே பண்ணி அங்கால போட்டன். இப்ப அக்காண்ட கல்யாணத்துக்கு வந்தன்”

அவன் ‘லண்டன்’ எண்டதும், எனக்கு ஒரு நம்பாசை. தினேஷை தெரிஞ்சிருக்குமா? கேட்பமா? என்று ஒரே குழப்பம். அவனாகவே கேட்டான், “அவரின்ட ஏதாவது போட்டோ வைச்சிருக்கிறியா?”. கான்ட் போன்ல கல்யாண வீட்டில எடுத்த படம் இருந்திச்சு. இது அண்ணா பாவிச்ச போன். அந்த நேரம் எடுத்திருக்கான்.

“ஓ.. இருக்கே!” காண்பித்தேன். சர்வேஸ் முகத்தில் ஈயாடவில்லை. நொடியில் மாறிய அவன் முக இறுக்கத்தை கவனித்த நான் பதட்டத்துடன், “என்ன சர்வேஸ், இவரை உனக்குத் தெரியுமா?”
“அது வந்து….”
“என்ன சர்வேஸ்! என்ன விசயம்? எதுவானாலும் சொல்லு” என் பதட்டம் அதிகரித்தது.
“நான் சொல்லுறதில ஒண்டுமில்லை. இது சொல்லியே ஆகவேண்டிய விடயமும் தான். ஆனா அதை தாங்கிக்கிற சக்தி உன்கிட்ட இருக்குதா தெரியல”.
“ப்ளீஸ் சர்வேஸ் சொல்லு, எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்யுது”
“நான் பார்ட் டைம் வேர்க் பண்ணுற ரெஸ்ட்ரோடன்ட்ல தான் இவனும் வேர்க் பண்ணுறான். ஆள் அவ்வளவு நல்லவன் இல்லை”
“அப்படீன்னா?”
“வந்து…. இவனுக்கு மூன்று வருஷத்துக்கு முதல்லயே கல்யாணம் முடிஞ்சுது. அதுவும் எங்கட ஊர் பிள்ளை தான். ஒரு குழந்தையும் இருக்கு”

என் கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. என் நிலையைப் பார்த்த சர்வேஸ் இன்னும் மனக்கஷ்டப்பட்டான். என்னை ஒரு நிலைக்குக் கொண்டுவர அவன் ஏதேதோ எல்லாம் கூறினான். கல்யாணம் செய்த நாளில் இருந்து தினேஷிற்கு என் மீதிருந்த ஈடுபாடும், அக்கறையும் ‘அவன் அப்படிப்பட்டவன் தான்’ என்பதில் எந்தவித சந்தேகத்தையும் கொண்டு வரவில்லை. இடிந்து போய் அக்கல்லிலேயே மீண்டும் நான் உட்கார்ந்து விட்டேன். இப்ப நான் இருக்கிற நிலையில அப்பா கிட்ட கேட்க வேண்டிய கேள்வி, “நானா அப்பா கல்யாணத்துக்கு ஆசைப்பட்டன். நானா மாப்பிள்ளையைக் கொண்டு வந்தன். எனக்கு ஏன் இப்பிடி நடந்திச்சு?”. அதை அவர் தாங்குவாரா??....


யாவும் கற்பனை


thanks Sayan


வெள்ளி, 26 நவம்பர், 2010

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.

கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,

ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.

காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது.

இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.

உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.

வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.


பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.

தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார்.

அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,...

* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.

* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.

* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரணமாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.


நீங்கள் எதற்கு அடிமை?

'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!' - கவிஞர் கபீர்.

எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்.

Self medication' எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ 'ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை' என் கின்றன. சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள். இங்கு 'போதை' என்பதை புகை, மது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம்.வீடியோ கேம்ஸ், செல்போன், இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான 'ஓவர் ஈட்டிங்', கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல்லாமல் காணும் அனைத்து ஆண்கள்/பெண்களிடமும் 'நட்பு' பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...

"போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் 'substance addiction' மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது 'Behaviour addiction' என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!" என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். "ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்ற மருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது. இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் 'பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்'களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.

பண்பியல் சார்ந்த அடிக்ஷன்களை எடுத்துக்கொண்டால், 'withdrawal symptoms இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 'மீண்டும் எப்போது இணையத்தில் இணைவோம்' என்று வேறு வேலைகளை மறந்து, அதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத சில விஷயங்களை விர்ச்சுவல் உலகத்தில் சாதிக்க முடியும் என்று நினைப்பதால்... இணையம், சமூக வலைதளங்கள், கேமிங் சமாசாரங்கள் ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள். எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!" என்கிறார் யாமினி.

"கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!" என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே 'instant pleasure' என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார். அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, 'நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்' என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.

மது என்பது அல்ல; வேறு எந்த வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானாலும், மறுவாழ்வு மையச் சேவைகள் மூலம் மீட்டு எடுக்கலாம். டி-டாக்ஸிஃபிகேஷன், சைக்கோ தெரபி, ஃபாலோ-அப்... இந்த மூன்றினால் போதைக்கு அடிமையான ஒரு வரை விடுவிக்க முடியும். ஆனால், நம் நாட் டில் இறுதிக் கட்டமான 'ஃபாலோ-அப்'பை மட்டும் பெரும்பான்மையான மக்கள் தொடர்வது இல்லை. அதிலும் இளைஞர்கள் சுத்தமாகத் தொடர்வது இல்லை. அதனாலேயே மீண்டும் அந்தப் பழக்கங்களில் விழுகிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் போதைக்கு அடிமையான கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார். இனிமேல் போதையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு வகுப் புகள் எடுப்போம். இன்று அப்படி இல்லை. மகன் சிகிச்சைக்காக வருகிறான். அவன் தாய்க்கு நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம்!" என வருத்தத்துடன் தன் கருத்துக்களைச் சொல்கிறார் அனிதா.

"எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!" என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். "போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?' என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.

போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம், பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.

'யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. 'அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!' என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள். நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம்.

தவிர்த்திடு உடனே போதையை
சீராகும் உங்கள் வெற்றிப் பாதையே.

வியாழன், 25 நவம்பர், 2010

இதயத்தைக் கவர இனிய வழி!

"இதயம்"...நான்கு எழுத்துகள் கொண்ட அழகான ஓர் ஒற்றைச் சொல்.

நான்கு அறைகளைக் கொண்ட, உடம்பின் உன்னதமான உறுப்பு, இதயம். இதன் இயக்கம்தான் ஒவ்வொருவரையும் இயங்க வைக்கிறது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.

வெறும் இயக்கத்தை மட்டுமா இந்த இதயம் செய்கிறது? தவறான செயலைச் செய்து விட்டால், `உன்னிடத்தில் இதயமே இல்லையா? நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று விழிகள் விரிய வினாக்கள் வரிசை வரிசையாக எழுவதையும் கேட்க முடிகின்றது.

இதயம் என்பது மனிதநேயத்தையும் இங்கே வெளிப்படுத்துகின்றது.

மனிதநேயமிக்க இதயத்தில் இடம் பிடிக்கவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். இதயத்தை வெல்வதற்கு இனிய வழி ஒன்று இருக்கின்றது. அதுதான் நாம் பேசும் வார்த்தைகள்.

பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.

அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.

இனிய இளைஞனே! யாரிடம், எப்படி, என்ன பேச வேண்டும் என்ற உத்திகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பிறரிடம் பேசும்போது அவர்களுக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் தரும் வகையில் வார்த்தைகளைப் போட்டுப் பேசுங்கள்.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.

இரண்டு அடிகளால் உலகத்துக்கு உன்னதக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் வள்ளுவப் பெருந்தகை. அவர் எழுதிய திருக்குறளில் `சொல்வன்மை' என்கிற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைப் பாங்காய்ப் படைத்துள்ளார்.

சொல்வன்மை, அதாவது சொல்லுகின்ற சொல் திறமைமிக்கதாக இருக்க வேண்டும். மற்றொரு சொல் அதை வெல்ல முடியாதபடி சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதைத்தான்-

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''

என்கிறார் திருவள்ளுவர்.

பேச்சைத் தொடங்குகின்ற சொல் வலிமையானதாக இருக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் துவக்கத்தில் ஆடுகின்ற ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணியின் வெற்றிக்கு அது அடித்தளமாக அமையும். அதுபோல் பேச்சின் தொடக்கமும் பிறரைத் தன் பக்கம் ஈர்க்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஓர் உன்னதக் காப்பியம். ஒரு சாதாரணக் குடிமகள் கண்ணகி. அரசனுடைய சபையிலே அவள் வாதத்தை எடுத்துரைக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே...

`தேரா மன்னா, செப்புவது உடையேன்'

என்று நறுக்குத் தெறித்தாற்போல நான்கே சொற்கள். அரசனே, நீ தேர்வாகவே மாட்டாய். அதாவது அழிந்துதான் போவாய் என்கிறாள். காரணம், நீ வழங்கிய தவறான தீர்ப்புதான். அதைத் தொடர்ந்து, தான் யார் என்பதற்கான விளக்கமாய்...

"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உடுநர் நெஞ்சகத்தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே''

அதாவது கன்றுக்குட்டியைக் கொன்றதற்காக தன் ஒரே மகனை அதே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதியை நிலை நாட்டிய சோழநாட்டின் தலைநகரான பூம்புகாரிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறாள்.

கண்ணகியின் வலிமையான வார்த்தைக்கு இயற்கை ஆமோதிக்கிறது. அரசவை அடக்கமாகிறது. சொல்லில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். அது வெற்றியைத் தரும். கண்ணகியின் வாக்கு அதற்கு எடுத்துக்காட்டு.

அன்பான இளைஞர்களே! வாழ்க்கை நடத்துகிற தேர்வுகளில் வெற்றி பெறப் போகின்றவர்களே! வாழ்வின் பல்வேறு சூழல்களில் சுருக்கமாக, அழகாக, புரியும்படி உங்கள் கருத்துகளை முன்மொழியுங்கள்.

எதிரில் இருப்பவர்களின் முகபாவங்களை, எண்ண ஓட்டங் களை, வெளிப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கண்களைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இது உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டாக்கும்.

நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லுகிறபோது எதிரில் இருப்பவர்களின் முகபாவம், உடல் அசைவுகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதிரிலிருப்பவர் என்ன நினைக்கின்றார் என்பதை உடலசைவுகள் வெளிப்படுத்தும். அதைத்தான் `உடல்மொழி' என்கிறார்கள். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.

இனிய சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும் என்கிறது பல்கேரியப் பழமொழி. எனவே எப்போதும் இனிய சொற்களைச் சொல்லுவதில் கவனமாக இருங்கள்.

சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பார் கலில்ஜிப்ரான்.

இனிய இளைஞனே! அடுத்தவர்களின் இதயத்தை நீ வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. என்ன தெரியுமா? பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும். இதுதான் இதயத்தைக் கவரும் இனிய வழி.


திங்கள், 22 நவம்பர், 2010

புதிய அமைச்சரவை விபரம்

தி.மு.ஜயரத்ன - பிரதமர்

நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்

மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்

சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்

ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி

தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு

டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி

ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்

ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்

சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி

விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்

ரவூப் ஹக்கீம் - நீதி

பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி

வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு

எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி

ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு

டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்

சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்

ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்

பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்

அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்

திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்

காமினி லொக்குகே - விவசாயம்

பந்துல குணவர்தன - கல்விமகிந்த

சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்

ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி

ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி

பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்

சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்

மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்

கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்

குமார வெல்கம - போக்குவரத்து

டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்

சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு

சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்

ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி

டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு

ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி

டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்

மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்

எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்

குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்

மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு

மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு

தயாசிறீத திசேறா - அரச வளங்கள்

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்

ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்

லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்

நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்

வியாழன், 18 நவம்பர், 2010

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............


இந்த நாட்டுல பேசுறதுக்கு கூட யாரும் தயாராஇல்லப்பா. எல்லாரும் துட்டு, துட்டு என்றேசொல்லிட்டு இருக்காங்க. ஆணும் பெண்ணும் தீயாவேலசெய்ரானுங்கப்பா. சம்பாதிக்கறது சந்தோசமாவாழறதுக்கு மட்டும் தான்னு இவங்கள பாத்தாதெரிஞ்சிக்கலாம்.
சரி வாங்க விஷயத்துக்கு போவோம்(நீங்கவரிங்களோ இல்லையோ நான் தீயா போயிட்டுஇருப்பேன்)

மிருகத்துக்கும் மனுசனுக்கும் உள்ள ஒரேவித்தியாசம் உடை மட்டுமே
(
பார்வையில்).

என்ன மிருகம், சேமிப்பு என்ற போர்வையில் நாலுதலமுறைக்கு சேர்த்து வைக்க நினைக்கிறது இல்ல.மனுஷன் அப்படி கிடையாது, முடிஞ்சவரைக்கும்தனக்கும் தன்னுடைய எதிர்கால சந்ததிகளுக்கும்சேமிச்சி வச்சிட்டு போறான்.

நான் பார்த்தவரைக்கும் நம்ம இலங்யருங்கமட்டும் தான் குடும்பம் பத்தி ரொம்ப கவல படறோம்.மேலை நாட்டவரும் மற்றும் பல ஆசியநாட்டு மக்களும் இந்த விஷயத்துக்காக ரொம்பசிரத்தை எடுத்துக்கறது இல்ல.


நம்மூர்ல தான் 50 வருசமா உழைச்சி அந்த செல்வத்ததன் புள்ளைங்களுக்கு கொடுத்துபுட்டு பெரியவங்கவீடு வாசல் இல்லாம தெருவிலேயோ, இல்லஎதாவது முதியோர் காப்பகதுலையோ கெடக்கறாங்க. ஏன் இந்த கஷ்டம் நமக்கு. தன்புள்ளைங்க வாழ்கைய நெனச்சுக்கிட்டு பல பேருஎந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம, காசசேர்த்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத மட்டுமேதங்களோட வாழ்கையின் லட்சியமா வெச்சிவாழறவங்க நம்ம மக்கள் தான்.

இது மாறனும் ஒரு பக்கம் அநியாயத்துக்குகுடும்பத்த பத்தி கவலப்படாத மக்கள், இன்னொருபக்கம் குடும்பம்கர கோயில மட்டுமே நினைச்சிகிட்டுசோறு தண்ணி இல்லாம நாளும் தன்ன வருத்திக்கிறமக்கள்.
என்னதான் பையனுக்கும், பொண்ணுக்கும் செஞ்சிவச்சாலும் நமக்கு என்னோமோ நல்ல கதி இல்ல. முடிஞ்சவரைக்கும் நமக்கு கிடச்ச இந்த மனுச பயவாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்.

“பேக்கட்டுல பத்து காசு இல்லேனா இந்த பாசம்நேசம் எல்லாம் இல்லீங்க


இந்த சிங்கம் வாழ்கை, சிங்கம் வாழ்கைன்னுசொல்வாங்க. அதாங்க நீங்க கேள்விப்பட்டுஇருப்பீங்க.


சிங்கம் ஒரே இடத்துல இருக்கும் அதோட துணைதான் உணவுக்காக அலைஞ்சி எடுத்துட்டு வந்துஅதுக்கிட்ட வச்சிட்டு வைட் பண்ணும். ராசாசாப்பிட்டு முடிச்சப்புறம் தான் துணை சாப்பிடும்.

நம்ம கதைய பாருங்க. என்ன தான் நாமசம்பாரிச்சாலும் கடைசில நமக்கு கிடைக்குறதுஎன்ன?

“கடைசில நாமெல்லாம் வால்மீகிதான்

என்ன தான் நம்ம குடும்பத்துக்கு செஞ்சாலும்கடைசில சொல்லுவாங்க பாரு ஒரு வார்த்த, அந்தவார்தைகாகதான் நாம பாடுபடறோம்.

அதுதான் "கடமை"

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா -கடமைய ஆற்றுங்க ஆனா உங்க கடமையே உங்களஎதிர்காலத்துல காப்பாத்தும் அப்படிங்கற நினைப்பதூரம் போட்டுட்டு உங்களுக்காகவும் கொஞ்சம்சேமிச்சி வச்சிக்கோங்க.

எதிர்காலத்துல பையனும், பொண்ணும் உங்களுக்குடாட்டா காட்டிட்டு போனப்புறம் அத வச்சிசந்தோசமா வாழ பழகிக்கங்க.

ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற உங்கமனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி)மட்டுமே நிஜம். மத்ததெல்லாம் "passing clouds".

குழந்தைங்க மேல அன்பு வைங்க ஆனா அவங்கதான்நம்ம எதிர்காலம் அப்படிங்கற எண்ணம்வைக்காதீங்க.

நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காமஅவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழவிடுங்க.

கனவு மெய்பட வேண்டும்

"வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் அதுல இந்தவாலிபம் கொஞ்ச நேரம் தான்"