வியாழன், 18 நவம்பர், 2010

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............


இந்த நாட்டுல பேசுறதுக்கு கூட யாரும் தயாராஇல்லப்பா. எல்லாரும் துட்டு, துட்டு என்றேசொல்லிட்டு இருக்காங்க. ஆணும் பெண்ணும் தீயாவேலசெய்ரானுங்கப்பா. சம்பாதிக்கறது சந்தோசமாவாழறதுக்கு மட்டும் தான்னு இவங்கள பாத்தாதெரிஞ்சிக்கலாம்.
சரி வாங்க விஷயத்துக்கு போவோம்(நீங்கவரிங்களோ இல்லையோ நான் தீயா போயிட்டுஇருப்பேன்)

மிருகத்துக்கும் மனுசனுக்கும் உள்ள ஒரேவித்தியாசம் உடை மட்டுமே
(
பார்வையில்).

என்ன மிருகம், சேமிப்பு என்ற போர்வையில் நாலுதலமுறைக்கு சேர்த்து வைக்க நினைக்கிறது இல்ல.மனுஷன் அப்படி கிடையாது, முடிஞ்சவரைக்கும்தனக்கும் தன்னுடைய எதிர்கால சந்ததிகளுக்கும்சேமிச்சி வச்சிட்டு போறான்.

நான் பார்த்தவரைக்கும் நம்ம இலங்யருங்கமட்டும் தான் குடும்பம் பத்தி ரொம்ப கவல படறோம்.மேலை நாட்டவரும் மற்றும் பல ஆசியநாட்டு மக்களும் இந்த விஷயத்துக்காக ரொம்பசிரத்தை எடுத்துக்கறது இல்ல.


நம்மூர்ல தான் 50 வருசமா உழைச்சி அந்த செல்வத்ததன் புள்ளைங்களுக்கு கொடுத்துபுட்டு பெரியவங்கவீடு வாசல் இல்லாம தெருவிலேயோ, இல்லஎதாவது முதியோர் காப்பகதுலையோ கெடக்கறாங்க. ஏன் இந்த கஷ்டம் நமக்கு. தன்புள்ளைங்க வாழ்கைய நெனச்சுக்கிட்டு பல பேருஎந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம, காசசேர்த்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத மட்டுமேதங்களோட வாழ்கையின் லட்சியமா வெச்சிவாழறவங்க நம்ம மக்கள் தான்.

இது மாறனும் ஒரு பக்கம் அநியாயத்துக்குகுடும்பத்த பத்தி கவலப்படாத மக்கள், இன்னொருபக்கம் குடும்பம்கர கோயில மட்டுமே நினைச்சிகிட்டுசோறு தண்ணி இல்லாம நாளும் தன்ன வருத்திக்கிறமக்கள்.
என்னதான் பையனுக்கும், பொண்ணுக்கும் செஞ்சிவச்சாலும் நமக்கு என்னோமோ நல்ல கதி இல்ல. முடிஞ்சவரைக்கும் நமக்கு கிடச்ச இந்த மனுச பயவாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்.

“பேக்கட்டுல பத்து காசு இல்லேனா இந்த பாசம்நேசம் எல்லாம் இல்லீங்க


இந்த சிங்கம் வாழ்கை, சிங்கம் வாழ்கைன்னுசொல்வாங்க. அதாங்க நீங்க கேள்விப்பட்டுஇருப்பீங்க.


சிங்கம் ஒரே இடத்துல இருக்கும் அதோட துணைதான் உணவுக்காக அலைஞ்சி எடுத்துட்டு வந்துஅதுக்கிட்ட வச்சிட்டு வைட் பண்ணும். ராசாசாப்பிட்டு முடிச்சப்புறம் தான் துணை சாப்பிடும்.

நம்ம கதைய பாருங்க. என்ன தான் நாமசம்பாரிச்சாலும் கடைசில நமக்கு கிடைக்குறதுஎன்ன?

“கடைசில நாமெல்லாம் வால்மீகிதான்

என்ன தான் நம்ம குடும்பத்துக்கு செஞ்சாலும்கடைசில சொல்லுவாங்க பாரு ஒரு வார்த்த, அந்தவார்தைகாகதான் நாம பாடுபடறோம்.

அதுதான் "கடமை"

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா -கடமைய ஆற்றுங்க ஆனா உங்க கடமையே உங்களஎதிர்காலத்துல காப்பாத்தும் அப்படிங்கற நினைப்பதூரம் போட்டுட்டு உங்களுக்காகவும் கொஞ்சம்சேமிச்சி வச்சிக்கோங்க.

எதிர்காலத்துல பையனும், பொண்ணும் உங்களுக்குடாட்டா காட்டிட்டு போனப்புறம் அத வச்சிசந்தோசமா வாழ பழகிக்கங்க.

ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற உங்கமனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி)மட்டுமே நிஜம். மத்ததெல்லாம் "passing clouds".

குழந்தைங்க மேல அன்பு வைங்க ஆனா அவங்கதான்நம்ம எதிர்காலம் அப்படிங்கற எண்ணம்வைக்காதீங்க.

நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காமஅவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழவிடுங்க.

கனவு மெய்பட வேண்டும்

"வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் அதுல இந்தவாலிபம் கொஞ்ச நேரம் தான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக