வெள்ளி, 26 ஜூலை, 2013

பரதனுக்கும் பதவி ஆசை என்றால் பாவம் அயோத்தி மக்கள்

இராமரைக் காட்டிற்கு அனுப்ப வேண்டு மென்ற தனது சதித்திட்டத்தை நிறைவேற்று வதில் கூனியாகிய மந்தரை திடசங்கற்பம் பூண்டிருந்தாள். இராமருடைய பட்டாபிசேகத்தைத் தடுத்து, அவனைக் காட்டுக்கு அனுப்புவதே அவளின் இலக்காக இருந்தது.  தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற கைகே யியை அவள் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டாள். பரதன் நாடாள வேண்டும்; இராமன் காடேக வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை தசரதன் முன் வைக்குமாறு, கைகேயிக்கு ஆலோசனை கூறுகிறாள் மந்தரை.
ஆட்சி - பதவி என்றால் யாருக்குத்தான் ஆசையில்லை.  மந்தரையின் வலையில் விழுந்த கைகேயி, பரதனை நாடாள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். கூடவே இராமரைக் காட்டுக்கு அனுப்புவதிலும் கடும் பிரயத்தனம் செய்தாள். கூனியின் திட்டம் கைகேயினூடாக நடந் தேறுகின்றது. 

இப்போது இராமன் காடு சென்றதால் கைகே யிக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை. மாறாக தன் கணவனான தசரதனை இழந்து விதçவாகிப்போனமை; தன்மகன் பரதனின் வெறுப்புக்கு ஆளாகிய
மை; சிற்றன் னையாக இருந்த போதிலும் தன் தாய் போல கைகேயிக்கு மதிப்பளித்த இராமனை காட்டிற்கு அனுப்பியமை; இதனால் அயோத்தி மக்களின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டமை என பல வழி களிலும் கைகேயி துன்பப்பட்டாள்.  அதேநேரம் கூனியாகிய மந்தரை இராமனைக் காட்டிற்கு அனுப்பியதன் மூலம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் களிப்புற் றாள். இந்த இதிகாச வரலாற்றை நினைக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற விவகாரங் களே நினைவுக்கு வருகின்றன.

ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ் வரன் முதல் அமைச்சராக பட்டாபிசே­கம் செய்து விடுவாரோ! என்ற பயத்தால் கூட்ட மைப்பில் இருக்கும் கூனிகள் சிலர் சதி செய்கின்றனர்.அதற்காக கைகேயியை அவர்கள் கச்சிதமாக பயன்படுத்துவதும் தெரிகின்றது. ஓ! இப்போது கூட்டமைப்புக்குள் இராமரின் பட்டாபிசேகத்தை தடுக்கும் கூனியும் கைகேயியும் தசரதனின் உயிரைப் பறித்தது போல, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சம்பந்தரை ஓரம் கட்டும் சதித்திட்டத்தில் களம் இறங்கி சதுராடுகின்றனர்.  என்ன செய்வது! பரதனுக்கும் பதவியாசை யயன்றால் பாவம் அயோத்தி மக்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை .



பரவாயில்லை; முப்பது வருட ஆயுதப் போராட்டம் தந்த தோல்வியைச் சந்தித்துக் கொண்ட நாம், பதவியாசை பிடித்த இவர்கள் எங்களுக்கு உரிமை பெற்றுத் தருவர் என்றா நம்பினோம். இல்லைவே இல்லை. நடப்பதைச் சகித்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக