வெள்ளி, 18 ஜனவரி, 2013

பிரச்சினை ஏன்?

ஒருவருக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  இருப்பதால்தான் ஒருவருக்குப் பிரச்சினைகள் வருகின்றன.வாழ்க்கையில் சிக்கல்,தெளிவு இரண்டுமே சம அளவில் இருக்கின்றன.இவை இரண்டையும் எப்படி சமன் செய்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் இருக்கிறது.சிக்கலான தருணங்கள் வரும்போது,டென்சன் உச்சத்தை அடையும்போது, சிக்கலான விசயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் முன் தெளிவாக இருக்கும் எளிமையான விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.தானாக அமைதி பிறக்கும்.மனதில் அமைதி தவழும் தருணங்களில், அதிக கவனம் தேவைப்படும் சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காணுங்கள்.வாழ்க்கை எளிய விஷயங்கள் மட்டும் கொண்டதாயிருந்தால் விரைவில் ஒருவர் சோம்பேறியாகக் கூடும்.அதேபோல வாழ்க்கை சிக்கலானதாக மட்டும் இருந்தால் ஒவ்வொரு நாளும் டென்சன் தான்.இரண்டையும் சாமர்த்தியமாக சமாளித்தால்  வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
                                                         --ரவிசங்கர்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக