செவ்வாய், 24 டிசம்பர், 2013

மாந்­தரை மீட்­டிட பாலகன் பிறந்தார்



உல­க­மெங்­கிலும் மிகசிறப்­பாக கொண்­டா­டப்­ப­டு­கின்ற இந்த நத்­தா­ரா­னது சக­லத்­தையும் படைத்த சர்­வ­ சி­ருஷ்­டி­க­ரான பிதா­வா­கிய தேவனின் குமா­ர­னா­கிய இயேசு கிறிஸ்து மாந்­தரை மீட்­டிட மானிட உருவில் ஏழ்மை கோலமாய் தாழ்­மையின், ரூபமாய், மண்ணில் உதித்த பொன்­னான திரு­நாளே!
மனு­க்கு­லத்தின் பாவங்­களை போக்கி சாபங்­களை நீக்கி அனை­வரும் பரி­சுத்­தமாய் வாழவும் இன, மத பேத­மின்றி சக­லரும் சாந்­தமும் சமா­தா­னமும் சம­தர்­மமாய் வாழ வேண்டும் என்ற பிதாவின் சித்­தத்தை வெளிப்­ப­டுத்­தினார்.
வேதத்தில் கூறப்­பட்­டுள்­ள­படி இருளில் நடக்­கிற ஜனங்கள் பெரிய வெளிச்­சத்தைக் கண்­டார்கள். மரண இருளின் தேசத்தில் குடி­யி­ருக்­கின்­ற­வர்கள் மேல் வெளிச்சம் பிர­கா­சித்­தது" (ஏசாயா 9:2) இந்த கூற்­றுக்­கி­ணங்க மெய்­யா­கவே நம் இயேசு இவ் உலகின் இருளை அகற்றும் சுடர் ஒளியா­னவர் என்­பது மிகை­யா­காது. இதன்­படி நத்­தாரை மிக களிப்­பாக கொண்­டா­டு­வது மட்­டு­மல்­லாது இதன் உண்­மை­யான அர்த்­தத்தை உணர்ந்­த­வர்­களாய் செயல்­ப­டு­வோ­மாக.
ஆஹோ மார்­கழி மாதம் என்­றாலே.... என்ன குதூ­கலம்..! எத்­தனை கொண்­டாட்டம்..! இதிலும் நமது சின்னஞ் சிறார்­க­ளுக்கோ சொல்­லொணா மகிழ்ச்சி ததும்பும் விடு­முறை நாட்­களும் கூட அது மட்­டுமா? இக்­கா­லத்தில் அகி­ல­மெங்கும் பட்­ட­ணங்கள், கிரா­மங்கள், ஆல­யங்கள், வீதிகள், வீடுகள் தோறும் வர்ண ஜாலங்கள், பல வர்ண கோலங்கள், மின் விளக்­குகள், நத்தார் மரங்­க­ளினால் அலங்­க­ரிக்­கப்­பட்ட தோர­ணங்கள், ஆங்­காங்கே பட்­டாசு சத்­தங்கள், வாண­வெ­டிகள், சிறு­வர்கள், பாவையர், ஆட­வர்­க­ளது புத்தம் புதிய நவ­நா­க­ரீக உடைகள் இன்னும் வர்­ணித்துக் கொண்டே போகலாம். அத்­த­னையும் நம் இயேசு பால­கனின் பிறப்பை கோலா­க­ல­மாக வர­வேற்க காத்­தி­ருக்கும் ஆயத்­தங்கள் தானோ..? எனலாம்.
இந்த உவ­கை­யூட்டும் திரு­நாளில் நம்மை இரட்­சிக்க வந்த இயேசு கிறிஸ்­துவை பற்­றியும் சற்று சிந்­தித்து தியா­னிப்­போமா...? தேவன் தமது மக்கள் தன்னை ஒவ்­வொரு நாளும் தேட வேண்டும் என்று விரும்­பு­கின்றார். இக்­கி­றிஸ்மஸ் காலங்­களில் மாத்­திரம் அல்ல சங்­கீ­த­காரன் 23 ஆம் அதி­கா­ரத்தில் சொன்­ன­படி என் பாத்­திரம் நிரம்பி வழி­கின்­றது. ஜீவ­னுள்ள நாளெல்லாம் நன்­மையும் கிரு­பையும் என்னை தொடரும் என்று சொல்­லு­கின்றான்.
யூதர்கள் இஸ்­ர­வேலர் தம்மை மீண்டும் ஓர் இரட்­சகர் வருவார் என்று எதிர்­பார்த்­தார்கள். மல்­கியா தீர்க்­க­த­ரி­சியின் கால­முதல் மத்­தே­யுவில் கிறிஸ்­துவின் வருகை வரை 400 வரு­டங்­களும் ஏசாயா தீர்க்­க­த­ரி­சியின் கால­முதல் கிறிஸ்­துவின் பிறப்பு வரை 800 வரு­டங்­களும் இருண்ட ஓர் பகு­தி­யாக யூதர்கள் தமது காலத்தை கழித்­தார்கள்.
முன்கூட்­டியே அவரின் பிறப்பை குறித்து வேதா­க­மத்தில் தீர்க்­க­த­ரி­சி­களால் கூறப்­பட்­டது. ஏசாயா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்" நமக்கு ஒரு குமாரன் கொடுக்­கப்­பட்டார்" கர்த்தத்துவம் அவர் தோளின் மேலி­ருக்கும் அவர் நாமம் அதி­ச­ய­மா­னவர். ஆலோ­ச­னைக்­கர்த்தா வல்­ல­மை­யுள்ள தேவன் நித்­திய பிதா, சமா­தா­னத்தின் பிரபு எனப்­படும்.
மீகா 5:2இல் எப்­பி­ராத்தா எனப்­பட்ட பெத்­ல­கேமே நீ யூதே­யா­வி­லுள்ள ஆயி­ரங்­க­ளுக்­குள்ளே சிறி­ய­தா­யி­ருந்தும் இஸ்­ர­வேலை ஆளப்­போ­கி­றவர் உன்­னி­டத்­தி­லி­ருந்து புறப்­பட்டு என்­னி­டத்தில் வருவார். அவ­ரு­டைய புறப்­ப­டுதல் அநாதி நாட்­க­ளா­கிய பூர்­வத்­தி­னு­டை­யது.
அவரின் (கிறிஸ்­துவின்) பிறப்பை உல­க­முண்­டா­வ­தற்கு முன்னே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­டது. வேதம் இப்­படி சொல்­லு­கின்­றது. நம்­மையும் அவர் உலகம் உண்­டாக முன்­ப­தா­கவே தெரிந்துகொண்டார்.
1. எபே­சியர் 1:4 இல் நமக்கு முன்­பாக நாம் அன்பில் பரி­சுத்­த­முள்­ள­வர்­களும் குற்­ற­மில்­லா­த­வர்­க­ளு­மா­யி­ருப்­ப­தற்கு அவர் உலகத் தோற்­றத்­துக்கு முன்னே கிறிஸ்­து­வுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்.
2. எபே­சியர் 1:6 இல் நம்­மு­டைய தய­வுள்ள சித்­தத்தின் படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவி­கார புத்­தி­ர­ரா­கும்­படி முன் குறித்­தி­ருக்­கிறார்.
3. எபே­சியர் 1:10 இல் தமக்­குள்ளே தீர்­மா­னித்­தி­ருந்த நம்­மு­டைய தய­வுள்ள சித்­தத்தின் இர­க­சி­யத்தை எங்­க­ளுக்கு அறி­வித்தார்.
4. எபே­சியர் 2:4 இல் தேவனோ இரக்­கத்தில் ஐசு­வ­ரி­ய­முள்­ள­வராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்­மு­டைய மிகுந்த அன்­பி­னாலே அக்­கி­ர­மங்­களில் மரித்­த­வர்­க­ளா­யி­ருந்த நம்மை கிறிஸ்­து­வு­டனே கூட உயிர்ப்­பித்தார். கிரு­பை­யி­னாலே இரட்­சிக்­கப்­பட்­டீர்கள்.
5.எபே­சியர் 2:12:13 இல் அக்­கா­லத்­திலே கிறிஸ்­துவைச் சேரா­த­வர்­களும் இஸ்­ர­வே­லு­டைய காணி­யாட்­சிக்குப் புறம்­பா­ன­வர்­களும் வாக்­குத்­தத்­தத்தின் உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அந்­நி­யரும் நம்­பிக்­கை­யில்­லா­த­வர்­களும் இவ்­வு­ல­கத்தில் தேவ­னற்­ற­வர்­க­ளு­மா­யி­ருந்­தீர்­க­ளென்று நினைத்துக்கொள்­ளுங்கள். முன்னே தூர­மா­யி­ருந்த நீங்கள் இப்­பொ­ழுது கிறிஸ்து இயே­சு­வுக்குள் கிறிஸ்­துவின் இர­த்­தத்­தி­னாலே சமீ­ப­மா­னீர்கள். யூதர்­க­ளுக்கு மாத்­தி­ரமே கிறிஸ்து சொந்­த­க்கா­ரல்ல அவர் முழு உல­கத்தின் மக்­களின் இரட்­சகர்.
எரே­மியா 9:23:24 இல் ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்­டப்­பட வேண்டாம்" பராக்­கி­ரமன் தன் பராக்­கி­ர­மத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்" ஐசு­வ­ரி­யவான் தன் ஐசு­வ­ரி­யத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்." மேன்மை பாராட்­டு­கின்­றவன் பூமி­யிலே கிரு­பையும் நியா­யத்­தையும் நீதி­யையும் செய்­கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்­தி­ருக்­கின்­றதைக் குறித்தே மேன்மை பாராட்­டக்­க­டவன் என்று கர்த்தர் சொல்­லு­கிறார். இவை­களின் மேல் பிரி­ய­மா­யி­ருக்­கிறேன் என்று கர்த்தர் சொல்­லு­கிறார்.


மேன்மை பாராட்­டு­கின்­றவன் கிறிஸ்­துவின் அன்­பையும் அவரின் கிரு­பையும் மகி­மையும் குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும். இஸ்­ர­வேலர் தமக்கு தம்மை நடத்தும் படி ராஜாவை ஏற்­ப­டுத்தும் படி சாமுவேல் என்னும் தீர்க்­க­த­ரி­சிக்­கூ­டாக தேவ­னிடம் வேண்­டுதல் செய்யும் படி கேட்­கின்றார். தேவன் இஸ்­ர­வே­லரை மோசே என்னும் ஊழி­யக்­காரன் வழி­யாக 430 வருடம் அடி­மைத்­த­னத்தின் வீடா­கிய எகிப்­தி­யரை அற்­புத அடை­யாள மூல­மாக புறப்­பட பண்ணி சினாய் மலையில் 10 கற்­ப­னை­களை கொடுத்து ஆசா­ரி­யர்கள் தீர்க்­க­த­ரிசி வழி­யாக அவர்­களை தமது ஆலோ­ச­னை­யின்­படி வழி நடத்தி வந்­தார்கள்.
1 சாமுவேல் 10:18 இல் இஸ்­ரவேல் புத்­தி­ரரை நோக்கி இஸ்­ர­வேலின் தேவ­னா­கிய கர்த்தர் சொல்­லு­கி­றது என்­ன­வென்றால் நான் இஸ்­ர­வேலை எகிப்­தி­லி­ருந்து புறப்­படப் பண்ணி உங்­களை எகிப்­தியர் கைக்கும் உங்­களை இறுகப் பிடித்த எல்லா இராஜ்ஜி­யத்­தாரின் கைக்கும் நீங்­க­லாக்­கி­விட்டேன்.
1 சாமுவேல் 8:7 இல் அப்­பொ­ழுது கர்த்தர் சாமு­வேலை நோக்கி ஜனங்கள் உன்­னி­டத்தில் சொல்­வ­தெல்­லா­வற்­றிலும் அவர்கள் சொல்லை கேள். அவர்கள் உன்னைத் தள்­ள­வில்லை. நான் அவர்­களை ஆளா­த­ப­டிக்கும் என்­னைத்தான் தள்­ளி­னார்கள்.
1 சாமுவேல் 8:10 இல் 16 வரை வேதா­க­மத்தில் வாசித்து பாருங்கள். உங்­களை ஆளும் ராஜாவின் காரியம் என்­ன­வென்றால் தன் ரதத்­திற்கு முன் ஓடும்­படி அவன் உங்கள் குமா­ரரை எடுத்து தன் ரகு சார­தி­க­ளா­கவும் தன் குதிரை வீர­ரா­கவும் வைத்துக் கொள்வான். ஆயிரம் பேருக்கும் ஐம்­பது பேருக்கும் தலை­வ­ரா­கவும் தன் நிலத்தை உழு­கி­ற­வர்­க­ளா­கவும் தன் யுத்த ஆயு­தங்­க­ளையும் தன் ரதங்­களின் பணி­முட்­டு­க­ளையும் பண்­ணு­கி­ற­வர்­க­ளா­கவும் அவர்­களை வைத்துக் கொள்வான். உங்­களை குமா­ரத்­தி­களைப் பரி­மள தைலம் செய்­கி­ற­வர்­க­ளா­கவும் சமையல் பண்­ணு­கி­ற­வர்­க­ளா­கவும் அப்பம் சுடு­கி­ற­வர்­க­ளா­கவும் வைத்துக் கொள்­ளுவான். உங்கள் வயல்­க­ளிலும் உங்கள் திராட்சைத் தோட்­டங்­க­ளிலும் உங்கள் ஒலிவ் தோப்­புக்­க­ளிலும் நல்­ல­வை­களை எடுத்துக்கொண்டு தன் ஊழி­யக்­கா­ர­ருக்குக் கொடுப்பான். உங்கள் தானி­யத்­திலும் உங்கள் திராட்­சப்­ப­ல­னிலும் தச­ம­பாகம் வாங்கிஇ தன் பிர­தா­னி­க­ளுக்கும் தன் சேவ­கர்­க­ளுக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்­கா­ர­ரையும் உங்கள் வேலைக்­கா­ரி­க­ளையும் உங்­களில் திற­மை­யான வாலி­ப­ரையும் உங்கள் கழு­தை­க­ளையும் எடுத்துத் தன்­னு­டைய வேலைக்கு வைத்துக் கொள்வான். யூதர்­க­ளையும் இஸ்­ர­வேலையும் இப்­ப­டித்தான் ராஜா ஆளுமை செய்து வந்தான்.
ரோமர் 6:12 இல் ஆகையால் நீங்கள் சரீர இச்­சை­களின் படி பாவத்­திற்குக் கீழ்ப்­படி­ய­த­தக்­க­தாக சாவுக்­கே­து­வான உங்கள் சரீ­ரத்தில் பாவம் ஆளா­தி­ருப்­பதாக.
ஒவ்­வொரு மனி­தனும் தன் வாழ்வில் இறை ஆசீர்­வா­தத்­தையும் ஆன்­மீக ஒளியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்­பது இறை­வனின் ஆசை. மனிதன் தன் வாழ்வை வாழும்­படி மனி­த­னுக்கு கீழ்­ப­்படிந்து தன் சரீ­ரத்தை பாவத்­துக்கு ஒப்புக்கொடுத்து தன் வாழ்வில் சமா­தா­ன­மில்­லாமல் உலக வாழ்வில் நிலை­யற்­ற­வ­னா­கவே வாழ விரும்­பு­கின்றான்.
ஐசு­வ­ரி­யத்­தி­னாலும் ஞானத்­தி­னாலும் பராக்­கி­ர­மத்­தி­னாலும் தன் பெலத்­தி­னாலும் வாழ முடியும் என்று சொல்­லு­கிறான். பாவத்­திலும் அடி­மைத்­த­னத்­திலும் உள்ள ஒவ்­வொரு மானி­டரையும் மீட்கும் படி இவ் உல­கத்­துக்கு தேவன் தமது குமா­ரனை அனுப்­பினார்.
யோவான் 1:9 இல் உல­கத்­திலே வந்து மானு­ட­னையும் பிர­கா­சிக்­கின்ற ஒளியே அந்த மெய்­யான ஒளி.
யோவான் 4:42 இல் மெய்யாய்க் கிறிஸ்­து­வா­கிய உலக இரட்­சகர் என்று அறிந்து விசு­வா­சிக்­கிறோம் என்­றார்கள்.
1 தீமோத்­தேயு 2:56 இல் தேவன் ஒரு­வரே. தேவ­னுக்கும் மானு­ட­ருக்கும் மத்­தி­யஸ்­தரும் ஒரு­வரே. எல்­லோ­ரையும் மீட்கும் பொரு­ளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மானு­ட­னா­கிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்­கு­ரிய சாட்சி ஏற்ற காலங்­களில் விளங்கி வரு­கி­றது.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறா­தவர். 2000 வரு­டங்­க­ளுக்கு முன் தாவீதுவின் ஊரிலே பிறந்த கர்த்­த­ரா­கிய கிறிஸ்து இரட்­சகர். ‘இரட்­சகர்’ என்­பது கிரேக்­கச்சொல்.சோடோர் இரட்­சிப்பு என்­ப­தற்­கான சொல்இ சோடோ­ரியா இரட்­சிப்பு என்­பது ‘ஆபத்து தண்­டனை’ பாவத்­தி­லி­ருந்து விடு­வித்தல் என்­பது பொருள் ஆகும். இரட்­சகர் என்­பது விடு­விப்­பவர் பாது­காப்­பவர் பரா­ம­ரிப்­பவர் ஆகும்.
1 யோவான் 2:2 இல் நம்­மு­டைய பாவங்­களை நிவர்த்திசெய்­கின்ற கிரு­பா­தா­ர­பலி அவரே. நம்­மு­டைய பாவங்­களை மாத்­திரம் அல்ல. சர்­வ­லோ­கத்தின் பாவங்­க­ளையும் நிவர்த்தி செய்­கிற பலி­யா­யி­ருக்­கிறார்.
லூக்கா 1:78–-79 இல் அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும் நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தவும் அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது.

எழுந்து சமாதானத்தின் பாதையில் நம்மை நடத்த இறைவன் விரும்புகிறார். உம்மை ஆள எழுந்து சமாதானத்தின் வாழ்வை ருசிக்க பாவத்திலிருந்து மீட்க இவ் கிறிஸ்மஸ் நாளில் உமது உள்ளத்தில் இயேசு என்னும் இரட்சகர் பிறக்கிறார். மண்ணில் உதித்த மைந்தனாம் இயேசு எமக்குள்ளும் பிறந்து எம்மை செம்மையான வழியில் நடத்திட வழி "செய்வார். “நீதிமான்களுக்கு வெளிச்சமும் செம்மையானவர்களுக்கு மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கும்" (சங்கீதம் 97:11) “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக" (லூக்கா 2:14)
உங்கள் அனைவருக்கும் எமது இனிய நத்தார்  – புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக