செவ்வாய், 31 டிசம்பர், 2013

new year sms

பிறக்கும் புத்தாண்டு  புனிதமாய் 
புதுமை புரட்சியோடு 
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....


2
இல்லம் தோறும்  இன்பம் பொங்க
இதயம் அதில் அமைதி தங்க
எங்கும் உயிரினம் மகிழ்வாய் வாழ
இனிய புத்தாண்டே மலர்ந்திடு இங்கே!...

எண்ணிய  எண்ணம் கை கூட
ஏற்றத் தாழ்வு நீங்கிட என்றும்
மண்ணினில் நல் வளம் பெருக்கிடும் ஆண்டாய்
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!...........

கண்ணியம் மேலும் உயர்ந்திடவும்
இனிய கனவுகள் யாவர்க்கும் மெய்ப்படவும்
புண்ணியம் செய்த பூமி இதுவென இங்கே
புகழ்ந்திட மலர்ந்திடு இனிய புத்தாண்டே...

கல்வியும் செல்வமும் வீரமும் ஓங்கிடக் 
காரிருள் நீங்கியே  மக்கள் வாழ்வினில் ஒளி பெற
இன்னருள் புரியும் இறைவனின் மனம் இளகிட
வரம் தரும் ஆண்டாய் மலர்ந்திடு இனிய புத்தாண்டே

தண்ணியும் நெருப்பும் காற்றும் மண்ணில்
தாண்டவம் ஆடிடும் நிலைதனை மாற்றி
விண்ணில் இருந்து நற் செய்திகள் பரப்பிட
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!................

3.
தனது பாரம்பரிய வாழ் நிலங்களிலே சந்தோமாக பல வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்து, இன்று தமது வாழ் நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களையும் இழந்து எதிலிக்கப்பட்டு தமது ஜீவ நாடியினைக் காப்பாற்றுவதற்காக வாழ்வின் கடைசி வினாடி வரை போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளின் அனைத்து துயரங்களும் நீங்கி மீண்டும் அவர்களின் சுயமும் மகிழ்ச்சியும் அவர்களிடமே வந்து சேர பிறக்கின்ற விரோதி வருடம் வழிகோல இறைவனைப் பிரார்த்திப்போம்..!

4.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக